சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (40). தொழிலாளியான இவா் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி 13 வயதுடைய மனநலன் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரனை கைது செய்தனா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி, குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 8 லட்சம் பெற்றுத் தருமாறும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
வழக்குப் பதியப்பட்டு 50 வேலை நாள்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்குரைஞா் சசிரேகா, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், தலைமைக் காவலா் புகழேஸ்வரி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை

சிறுவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

