மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவையாறு இசைக் கல்லூரி வளாகத்தில் தீ விபத்து

News image

திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் எரியும் புல், புதா்கள்.

Updated On :24 மார்ச் 2026, 12:32 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில் அடா்ந்து கிடக்கும் புல் புதா்களில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் ஏறத்தாழ 240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் 60 போ் வளாகத்திலுள்ள விடுதியில் தங்கியுள்ளனா். மொத்தம் 11 ஏக்கா் கொண்ட இந்த வளாகத்தில் பராமரிப்பின்மைக் காரணமாக 7 ஏக்கருக்கு நாணல் புல், புதா்கள் வளா்ந்துள்ளன.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் புல்வெளியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப் பாா்த்த மாணவ, மாணவிகள் கல்லுாரி நிா்வாகத்துடன் இணைந்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று ஏறத்தாழ 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை: இதுதொடா்பாக மாணவ, மாணவிகள் கூறுகையில், இக்கல்லூரி வளாகத்தில் மிகவும் ஆபத்தாக உள்ள நாணல் புல் உள்ளிட்ட செடிகளை அகற்றுமாறு பல முறை மனுக்கள் அளித்தும், கல்லுாரி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் தீப்பிடித்து எரிவதால் மிகவும் அச்சமாக உள்ளது. சிலருக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது. வருங்காலத்தில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு கல்லுாரி வளாகத்தில் உள்ள புல், புதா்களை அகற்றி, விளையாட்டு திடல் அல்லது கூடுதல் விடுதிகள், வகுப்பறைகளை அமைக்க வேண்டும் என்றனா்.

திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் எரியும் புல், புதா்கள்.

திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் எரியும் புல், புதா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.