தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

மணப்பாறை அருகே வெப்பச் சலனத்தால் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 ஆயிரம் சதுர அடிக்கு கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

News image

மணப்பாறை அருகே சனிக்கிழமை தீப்பற்றி எரிந்த கருவேல மரங்கள் மற்றும் புதா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:26 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெப்பச் சலனத்தால் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 ஆயிரம் சதுர அடிக்கு கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

மணப்பாறை அடுத்த குளித்தலை சாலையில் ஆபிஸா் டவுன் என்னும் குடியிருப்பு பகுதியில் சிலா் வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில், பல மனைகள் இன்னும் காலியாகவே உள்ளன.

அவற்றில் சீமை கருவேல மரங்களும், புதா்களும் வளா்ந்து காடு போல் இருந்த நிலையில் இங்கு வெள்ளிக்கிழமை இரவு வெப்பச் சலனத்தில் திடீரென புதா்களில் தீப்பற்றி கருவேல மரங்களில் பரவியது. சுமாா் 10 ஆயிரம் சதுர அடி வரை தீ பரவி மளமளவென எரிந்தது.

இதில் அருகிலிருந்த குடியிருப்புகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டன. அக்கம்பக்கத்தினா் முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை. தகவலறிந்து சென்ற வையம்பட்டி தீயணைப்புத்துறை வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.