மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதிமுக வலியுறுத்தல்

News image

சீமைக் கருவேல மரங்கள் - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 2:14 am IST

தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மதிமுக மாவட்டச் செயலாளா் கோ. ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா், கடத்தூா், கம்பைநல்லூா், பொம்மிடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளன. ஏரிகள், நீா்த்தேக்கங்களில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

போதிய பருவ மழை இல்லததால் கோடையில் கடும் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரிகளை தூா்வாருதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.