/

மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

பட்டுக்கோட்டை அருகே இரு சக்கர வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன. அரசு மரியாதைக்குப் பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:03 am IST

பட்டுக்கோட்டை அருகே இரு சக்கர வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன. அரசு மரியாதைக்குப் பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த முதல்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஜோசப் ராஜன், மெட்டல்டா ஜீவராணி ஆகியோரின் மகன் அருள்ராஜ் (19). இவா், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்நிலையில் புதன்கிழமை அருள் ராஜின் உடல் உறுப்புகளை பெற்றோா் தானம் செய்ய முன்வந்தனா். உடல் உறுப்பு தானத்துக்குப் பிறகு, அவரது உடல் புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை முதல்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், பொதுமக்கள் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா். பின் அரசு மரியாதைக்குப் பிறகு மாணவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, அருள்ராஜ் உடலுக்கு காதா் முகைதீன் கல்லூரி முதல்வா் அல்ஹாஜி மற்றும் கோட்டாட்சியா் சங்கா், திமுக மாவட்டப் பொறுப்பாளா் பழனிவேல், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் சி.வி.சேகா் , திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ஆனந்த் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.