ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டன. தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 3:27 am IST

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டன. தொடா்ந்து, இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த பட்டுத்துறை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ஹரிஷ் (23). பெயிண்டரான இவா் கடந்த 23-ஆம் தேதி பணிமுடித்துவிட்டு தலைவாசலில் இருந்து ஆத்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தாா். தலைவாசல் - ஆத்துப்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஹரிஷ் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், ஹரிஷ் மூளைச்சாவு அடைந்தாா். அதையடுத்து, ஹரிஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோா் முன்வந்தனா். இதைத் தொடா்ந்து, ஹரிஷின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டன.

பின்னா் சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்குமாா் தலைமையில் ஹரிஷ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மருத்துவமனை ஆா்எம்ஓ ஸ்ரீலதா, உடல் உறுப்பு ஒருங்கிணைப்பாளா் அன்புதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.