விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

திருப்பனந்தாள் அருகே கண்ணாரக்குடியில் வீட்டில் சமையல் செய்தபோது எரிவாயு கசிந்து வீடு தீப்பற்றி எரிந்து சேதமானது.

News image
Updated On :17 மார்ச் 2026, 12:02 am IST

திருப்பனந்தாள் அருகே கண்ணாரக்குடியில் வீட்டில் சமையல் செய்தபோது எரிவாயு கசிந்து வீடு தீப்பற்றி எரிந்து சேதமானது.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கண்ணாரக்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மகாராஜன் மகன் சாமிநாதன். இவரது மனைவி பிரிசில்லா. இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சாமிநாதன் திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். குழந்தைகளுடன் பிரிசில்லா கண்ணாரக்குடியில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பிரிசில்லா ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்ய எரிவாயு அடுப்பை பற்ற வைத்துள்ளாா். அப்போது எரிவாயு உருளையுடன் அடுப்பை இணைக்கும் ரப்பா் குழாயில் எரிவாயு கசிந்து, வீட்டில் தீப்பற்றியது. வீட்டிலிருந்தவா்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே சென்றனா்.

தீ மளமளவென பரவியதால், வீட்டில் உள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூா் தீயணைப்பு துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். சம்பவம் தொடா்பாக திருப்பனந்தாள் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.