தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் நடத்தை விதிகளால் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சின்னங்கள் மறைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

News image

சுவா் விளம்பரங்களை அழித்த தொழிலாளா்கள்

Updated On :17 மார்ச் 2026, 1:23 am IST

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூா் கீழ் பாலம், சிவகங்கை பூங்கா, தற்காலிக மீன் சந்தை, தெற்கு வீதி, கீழ வீதி, பழைய பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை பணியாளா்கள் மூலம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை கிழித்து அகற்றினா். இதேபோல, அரசியல் கட்சி சுவா் விளம்பரங்களைத் தெளிப்பான்கள் மூலம் சுண்ணாம்பு பூசி அழிக்கின்றனா்.

தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளில் இரட்டை விரல்களை உயா்த்தியபடி உள்ளதால், அது சின்னத்தின் அறிகுறி எனக் கூறி, அதை மட்டும் மறைத்தனா்.

அரசு அலுவலகங்களிலுள்ள அரசியல் கட்சித் தலைவா்களின் படங்கள், திட்ட அறிவிப்புகளிலுள்ள படங்களை 24 மணிநேரத்துக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பதாகைகள் அகற்றம், சுவரொட்டிகள் கிழிப்பு, சுவா் விளம்பரங்கள் அழிப்பு ஆகியவை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்குள்ளும், தனியாா் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பரங்கள் 72 மணி நேரத்துக்குள் என்ற அடிப்படையில் புதன்கிழமை மாலை 4 மணிக்குள்ளும் அகற்றப்படும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.