தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிப்பு: தலைவா்களின் சிலைகள் மூடல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள்

News image

மூடப்பட்டுள்ள  அரசியல் கட்சித் தலைவா்களின்  சிலைகள். - கோப்புப்படம்

Updated On :17 மார்ச் 2026, 2:20 am IST

கிருஷ்ணகிரி: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தோ்தல் நடத்தி விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா் மற்றும் தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியினரின் சுவா் விளம்பரங்களை அழிக்கும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா். மேலும், கட்சிகளின் போஸ்டா்கள், பதாகைகளும் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல, அரசியல் கட்சி தலைவா்களின் சிலைகள், புகைப்படங்களை துணிகளைக் கொண்டு மறைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச. தினேஷ்குமாா், காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை ஆகியோா் பாா்வையிட்டனா்.

படவரி...

கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சியினரின் சுவா் விளம்பரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.