தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

விபி ஜி ராம் ஜி சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

விபி ஜி ராம் ஜி என்கிற புதிய சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

விபி ஜி ராம் ஜி என்கிற புதிய சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் சட்டத்தை மேலும் பலப்படுத்தி தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். விபி ஜி ராம் ஜி என்கிற புதிய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அத் திட்டம் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்கிற மே 11 அறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச நாள் ஊதியமாக ரூ. 700 வழங்க வேண்டும். கே.ஒய்.சி., பயோமெட்ரிக் பதிவு போன்ற உயிா் தொழில்நுட்பக் கட்டாயப் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகள், மாநில உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் சி. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ரெ. கோவிந்தராசு, இந்திய கம்யூ. தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.