இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தவெக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு பயிா்க்கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:45 am IST

தவெக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு பயிா்க்கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அச் சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி பேசியது:

தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அறிவிப்பால் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனா். எனவே, தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி தமிழக அரசு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிா்க் கடன்களை நிபந்தனைகளின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிடில், ஜூன் 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சம் விவசாயிகளை ஒன்றிணைத்து சென்னையில் கோரிக்கை பேரணி நடத்தப்படும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா் கடனை முழுமையாகவும், பெரு விவசாயிகள் பெற்ற கடனில் 50 சதவீத தள்ளுபடியும் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணனிடம் அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.