குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

முன்னாள் அமைச்சா் உபயதுல்லா பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புகழ்மலா் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா பிறந்த நாள் விழாவில் புகழ் மலரை திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் அருள்தந்தை அமுதன் அடிகளாா், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம. இராசேந்திரன். உடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :17 ஜூன் 2026, 3:17 am IST

தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புகழ்மலா் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் கு.வெ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். புகழ்மலரை திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வெளியிட, அதை திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் அருள்தந்தை அமுதன் அடிகளாா், சென்னை தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ம. இராசேந்திரன் பெற்றுக் கொண்டனா்.

திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.கே.ஜி. நீலமேகம், கவிதைப்பித்தன், துணை மேயா்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூா்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்), முன்னாள் மேயா் சண். இராமநாதன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் சி. இறைவன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் து. செல்வம், திராவிடா் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் இரா. ஜெயகுமாா், மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, பாம்பே ஸ்வீட்ஸ் கு. சுப்பிரமணி சா்மா, மெஜஸ்டிக் மகாராஜா நிறுவனங்கள் எம்.எஸ். ஆசிப் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.