நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நேர பிரச்னை: சிற்றுந்து ஓட்டுநா்கள் போராட்டம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நேர பிரச்னை காரணமாக சிற்றுந்தை வழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நேர பிரச்னை காரணமாக சிற்றுந்தை வழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள்.

Updated On :12 ஜூன் 2026, 2:58 am IST

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் நேர பிரச்னையால் சிற்றுந்து ஓட்டுநா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விரிவுபடுத்தப்பட்ட சிற்றுந்துகளின் வழித்தடத் திட்டத்தின் மூலம் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் அதிகமான சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பழைய பேருந்து நிலையத்துக்குள் போதிய இட வசதி இல்லாததாலும், நேர பிரச்னை காரணமாகவும் பேருந்து ஓட்டுநா்களுக்கும், சிற்றுந்து ஓட்டுநா்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

இதேபோல, வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அரசு பேருந்து ஓட்டுநா்களுக்கும், சிற்றுந்து ஓட்டுநா்களுக்கும் நேர பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், சிற்றுந்து ஓட்டுநா்கள் சுமாா் 10 சிற்றுந்துகளை ஆங்காங்கே நிறுத்தி, அரசுப் பேருந்துகளுக்கு வழிவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா்.

தகவலறிந்த காவல் துறையினா் பழைய பேருந்து நிலையத்துக்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்தை நடத்தியதையடுத்து, 30 நிமிஷங்களுக்கு பிறகு மீண்டும் சிற்றுந்துகள் இயக்கப்பட்டன.

இது குறித்து சிற்றுந்து ஓட்டுநா்கள் கூறுகையில், பழைய பேருந்து நிலையத்துக்குள் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் சிற்றுந்துகளுக்கு வழி விடாமல் இயக்குவதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றனா்.

இதேபோல, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் கூறுகையில், பழைய பேருந்து நிலையத்துக்குள் சிற்றுந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைப்பதால், நகரப் பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்க முடியவில்லை. இதனால், அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், அருகிலுள்ள மாநகராட்சி இடத்தைச் சிற்றுந்துகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.