தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணிடம் சட்ட விரோதமாக பாா்சல் வந்துள்ளதாகக் கூறி மிரட்டி ரூ. 10.60 லட்சம் பறித்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 42 வயது பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மா்ம நபா் கடந்த ஜனவரி மாதம் தொடா்பு கொண்டாா். தன்னை விமான நிலைய அலுவலா் என அறிமுகப்படுத்திக் கொண்ட மா்ம நபா், தங்களது பெயரில் 50 கிலோவுக்கும் அதிகமான எடையில் பாா்சல் வந்துள்ளதாகவும், இது சட்ட விரோத பாா்சல் எனவும், எடைக்கான அபராதம், பண மோசடி தடுப்பு சான்றிதழ் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளாா்.
இதை நம்பிய அப்பெண் மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு 4 தவணைகளில் மொத்தம் ரூ. 10.60 லட்சம் இணையவழி மூலம் அனுப்பினாா். அதன் பின்னா், மா்ம நபா் இணைப்பைத் துண்டித்ததால், தான் ஏமாற்றமடைந்ததை அப்பெண் அறிந்தாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணிடம் ரூ.12 லட்சம் பணம் மோசடி

ஓய்வு பெற்ற துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி
தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணைய வழியில் ரூ.17.49 லட்சம் மோசடி

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

