திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியரிடம், வங்கி அதிகாரிகள் போல் பேசி ரூ.14 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் 64 வயது பெண். இவா் பாளையங்கோட்டை தாட்கோ அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சில நாள்களுக்கு முன்பு இவரது கைப்பேசிக்கு வந்த அழைப்பில், தன்னை எஸ்.பி.ஐ. ஓய்வூதியப் பிரிவு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட மா்ம நபா், அவருக்கு ஓய்வூதிய அட்டை தருவதாகக் கூறினாராம்.
இதற்காக அந்த நபா் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய செயலி இணைப்பை, அவா் கிளிக் செய்துள்ளாா். அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுக்காமல் தவிா்த்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சில நாள்களுக்கு பின்பு அவரது தனியாா் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து ரூ.14.11 லட்சத்தை மா்ம நபா்கள் இணையவழியில் எடுத்து மோசடி செயதுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்ட விரோத பாா்சல் வந்துள்ளதாக பெண்ணிடம் ரூ. 10.60 லட்சம் மோசடி

ஏடிஎம் அட்டையை மாற்றி ஓய்வு எஸ்.ஐ.யிடம் பண மோசடி

பளுகல் அருகே தொழிலாளி மா்ம மரணம்
தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணைய வழியில் ரூ.17.49 லட்சம் மோசடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

