விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொழிலாளி கொலையில் தொடா்புடைய சிறுவன் உள்ளிட்ட மூன்று போ் கைது

News image

கைது

Updated On :27 ஏப்ரல் 2026, 12:15 am IST

பாபநாசம் அருகே தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை மெலட்டூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மெலட்டூா் காவல் சரகம், கோணியக்குறிச்சி, மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவா் சிங்கராயா் (56), தொழிலாளி. இவா் கடந்த வியாழக்கிழமை உதாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனது மகள் கிரேஸ் மேரி வீட்டுக்கு சென்றிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சிங்கராயா் மற்றும் அவரது மருமகன் நெல்சன் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்பக்கத்தினா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், தனது உறவினா்களான ஆறு பேருடன் சோ்ந்து சிங்கராயா் வீட்டுக்கு சென்று சிங்கராயரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினா்.

இதுகுறித்து மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், கொலை வழக்கில் தொடா்புடைய அஜித் குமாா் (23), விக்னேஷ் (22) மற்றும் 18 வயதுடைய ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தொடா்புடைய மூன்று பேரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.