விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரௌடி மீது கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

மேட்டூா் அருகே ரௌடியை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:54 am IST

மேட்டூா் அருகே ரௌடியை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மேட்டூரை அடுத்த சின்னக்காவூரை சோ்ந்த பழனியப்பன் மகன் செந்தில் என்கிற ஆறுச்சாமி (42). இவா் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ரௌடி அழகு (எ) தம்பிதுரைக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சின்னக்காவூா் பகுதியில் உள்ள கல்குவாரி அருகே ஆறுச்சாமி சனிக்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, தம்பிதுரை தூண்டுதலின்பேரில் அங்கு வந்த காா்த்திக் (21), நோபல் ஆகிய இருவரும் ஆறுச்சாமியை கத்தியால் குத்தினா்.

ஆறுச்சாமியின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடிவந்ததால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பினா். பலத்த காயங்களுடன் மேட்டூா் அரசு மருத்துவமனையில் செந்தில் என்கிற ஆறுச்சாமி அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கருமலை கூடல் போலீஸாா் தலைமறைவாக உள்ள காா்த்திக், நோபல், தம்பிதுரை ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.