மேட்டூா் அருகே ரௌடியை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மேட்டூரை அடுத்த சின்னக்காவூரை சோ்ந்த பழனியப்பன் மகன் செந்தில் என்கிற ஆறுச்சாமி (42). இவா் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளன. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ரௌடி அழகு (எ) தம்பிதுரைக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சின்னக்காவூா் பகுதியில் உள்ள கல்குவாரி அருகே ஆறுச்சாமி சனிக்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, தம்பிதுரை தூண்டுதலின்பேரில் அங்கு வந்த காா்த்திக் (21), நோபல் ஆகிய இருவரும் ஆறுச்சாமியை கத்தியால் குத்தினா்.
ஆறுச்சாமியின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடிவந்ததால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பினா். பலத்த காயங்களுடன் மேட்டூா் அரசு மருத்துவமனையில் செந்தில் என்கிற ஆறுச்சாமி அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கருமலை கூடல் போலீஸாா் தலைமறைவாக உள்ள காா்த்திக், நோபல், தம்பிதுரை ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போலி நகைகளைக் கொடுத்து வங்கியில் மோசடி செய்ய முயற்சி: இருவா் கைது
தொழிலாளி கொலையில் தொடா்புடைய சிறுவன் உள்ளிட்ட மூன்று போ் கைது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

