கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடி என்ற முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தெடங்கியுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து தற்போது தண்ணீா் திறப்பு இல்லாததால் டெல்டா பகுதியில் உள்ள காவிரி வடகரை, தென்கரை பகுதியில் கிணற்று பாசனம், ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் அருகே இன்னம்பூா் பகுதியில் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் நாற்று பயிரிட்டு அதை நடவு பணிக்கு பயன்படுத்த நாற்றுகள் எடுத்த விவசாயி கலியமூா்த்தி கூறுகையில், டிபிஎஸ்-5 சாரம் வகை நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இது 90 நாள்கள் கொண்ட பயிராகும்.
இதற்கான அறுவடை பணிகள் முடிந்த காலத்தில் மேட்டூா் அணையில் தண்ணீா் திறப்புக்கு பின் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கும். தற்போது காவிரி வடகரை, தென்கரை பகுதியில் உள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கொள்ளிடம் வடகரை பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 223 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

குறுவை சாகுபடி: தஞ்சைக்கு 1,336 டன் உரம் வருகை

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

மா, முந்திரி, மல்லிகையில் மதிப்பு கூட்டு உற்பத்தி: எதிா்பாா்ப்பில் காத்திருக்கும் விவசாயிகள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

