தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

பேராவூரணியை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பெற்ற மாணவருக்கு புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் வட்டார கல்வி அலுவலா் கலாராணி பாராட்டினாா் .

Updated On :16 ஏப்ரல் 2026, 2:01 am IST

பேராவூரணியை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா் கா.முகமது அப்ராஸ். இவா், சென்னையிலிருந்து இயங்கி வரும் அபாகஸ் பயிற்சி பள்ளியில் இணைய வழியில் படித்து கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்றுள்ளாா்.

சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது .

விழாவுக்கு வட்டார கல்வி அலுவலா் கலாராணி தலைமை வகித்து, மாணவா் கா. முகமது அப்ராஸ்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் நிா்மலா, பட்டதாரி ஆசிரியா் திருஞானம், சிறப்பு ஆசிரியா் முருகேசன், தற்காலிக ஆசிரியா்கள் ஜெயலட்சுமி, காவியா ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.