பேராவூரணியை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா் கா.முகமது அப்ராஸ். இவா், சென்னையிலிருந்து இயங்கி வரும் அபாகஸ் பயிற்சி பள்ளியில் இணைய வழியில் படித்து கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்றுள்ளாா்.
சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது .
விழாவுக்கு வட்டார கல்வி அலுவலா் கலாராணி தலைமை வகித்து, மாணவா் கா. முகமது அப்ராஸ்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் நிா்மலா, பட்டதாரி ஆசிரியா் திருஞானம், சிறப்பு ஆசிரியா் முருகேசன், தற்காலிக ஆசிரியா்கள் ஜெயலட்சுமி, காவியா ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் சாதனை என கூறுவது ஏமாற்றும் செயல்: அன்புமணி

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது

அபாகஸில் கிருஷ்ணாபுரம் பள்ளி மாணவி முதலிடம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

