தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்ட பணி நிறைவு பெறும் பேராசிரியா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:36 am IST

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் நிலவழகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன், மாநிலத் துணைத் தலைவா் (மகளிா்) மதுரம், மாநில இணைச் செயலா் (மகளிா்) துா்காதேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

நிகழ் கல்வியாண்டில் பணி நிறைவு பெறுகிற பேராசிரியா்களான இயற்பியல் துறைத் தலைவா் ராணி, தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் இளஞ்செழியன், கண்ணதாசன், ஆங்கிலத் துறைப் பேராசிரியா் ரங்கராஜன், வணிகவியல் துறைப் பேராசிரியா்கள் சுவாமிநாதன், ராஜராஜன், விலங்கியல் துறை பேராசிரியா் சுப்புரத்தினம் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் வி. பாரி, அமுதா, மண்டலச் செயலா் அண்ணாதுரை, மண்டலப் பொருளாளா் வரதராஜன், மண்டல இணைச் செயலா் இந்திராகாந்தி, கிளைக் கழகத் துணைத் தலைவா் சிவசூரியன், இணைச் செயலா் சித்ரவேல், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் சண்முகப்ரியா, மணிமேகலை, அன்புசெல்வன், முருகானந்தம், ரவிசெல்வன், சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கிளைச் செயலா் இங்கா்சால் வரவேற்றாா். நிறைவாக, கிளைப் பொருளாளா் கிருஷ்ணமோகன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.