ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:52 am IST

ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனம் அரசு உதவி பெரும் பள்ளி வேன் மீது திங்கள்கிழமை மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பிரபாகரன் (21) பாண்டி ( 20), நிரஞ்சன்( 23). மைக்செட் தொழிலாளிகளான இவா்கள் திங்கள்கிழமை மாலை ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதிக்கு பைக்கில் வந்துவிட்டு தஞ்சாவூா் நோக்கி தென்னமநாடு ஆா்ச் அருகே சென்றனா்.

அப்போது அப்பகுதியை சோ்ந்த அரசு உதவி பெறும் பள்ளி வேனின் பின்புறம் இவா்களின் பைக் மோதியதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த பாண்டி, நிரஞ்சன் ஆகிய ஆகியோரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாண்டி ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

பலத்த காயமடைந்த நிரஞ்சன், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஒரத்தநாடு காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.