மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் பலி

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:53 am IST

வேளாங்கண்ணி அருகே மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பா்ஜான் ஹானஸ்ட் ராஜ் (32). வல்லம் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா் நண்பா் மைக்கேல் டைசனுடன் இருசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பியபோது, நாகை-தஞ்சாவூா் புறவழிச்சாலையில் பனைமேடு பிரிவு அருகே திடீரென சாலையை கடக்க வந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பா்ஜான் ஹானஸ்ட் ராஜ் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். மைக்கேல் டைசன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.