திருச்சியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஒரு இளைஞா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இளைஞருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்த மற்றொரு இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த விபத்து குறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் பலி

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

