தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தஞ்சாவூரில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:44 am IST

தஞ்சாவூரில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனத்துடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி மேம்பாலம் வழியாகச் சென்று அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.

இதில், 150-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியா் சௌமியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.