தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 மதுக்கடைகளை மூட திட்டம்

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :13 மே 2026, 12:37 am IST

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் விவரம்:

புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் சாந்தநாதபுரம் 4-ஆம் வீதியில் அடுத்தடுத்துள்ள 2 கடைகள் மூடப்பட உள்ளன.

இதேபோல, அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள 2 கடைகள், பேராவூரணி சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை பகுதியில் உள்ள தலா ஒரு கடைகள் மூடப்படவுள்ளன.

மேலும், வத்தனாக்கோட்டை, அண்டக்குளம், காவேரி நகா், கீரனூா், ஆளப்பிறந்தான், துரையரசபுரம், ஆலங்குடி, கீரமங்கலம், நெய்வாசல், பொன்னமராவதி, மணமேல்குடி ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு கடைகள் மூடப்பட உள்ளன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. ஓரிரு நாள்களில் கடைகளை மூடும் பணி நடைபெறும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.