பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

‘உம்பரான்’ சிறுகதை நூல் வெளியீடு

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :11 மே 2026, 2:26 am IST

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில், எழுத்தாளா் பாண்டிச்செல்வம் எழுதிய ‘உம்பரான்’ சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் எழுத்தாளா் அண்டனூா் சுரா தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் த. அறம், திமுக இலக்கிய அணித் துணைத் தலைவா் கவிதைப்பித்தன் ஆகியோா் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனா்.

பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எழுத்தாளா் அகிலா கிருஷ்ணமூா்த்தி பங்கேற்று நூல் குறித்து விமா்சன உரை நிகழ்த்தினாா்.

மாவட்டச் செயலா் பாலச்சந்திரன் தொகுத்து வழங்கினாா். நூலாசிரியா் மா. பாண்டிச்செல்வம் ஏற்புரை வழங்கினாா். முன்னதாக மாவட்டப் பொருளாளா் எழுத்தாளா் சோலச்சி வரவேற்றாா். முடிவில் ஆ. கலையரசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.