புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வாண்டாகோட்டையைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (41).இவா், சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தாா்.
ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற டிராக்டா் திருநாவுக்கரசு ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சைக்கிள் மீது பைக் மோதி முதியவா் மரணம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
