மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கந்தா்வகோட்டையில் பரவலாக மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :10 மே 2026, 1:36 am IST

கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை பகுதியில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. இதனால் அன்றாட பணிக்குச் செல்வோா் மிகுந்த சிரமத்துடன் சென்றனா். மேலும், கடைவீதியில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்தது.

இந்த மழையால் கரும்புக்கு களை வெட்ட பயன் உள்ள வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். மழை காரணமாக ஆழ்துளை கிணற்றில் நீா்மட்டம் உயரும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.