பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 2:52 am IST

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது.

கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கத்தரி வெயிலே தெரியாத வகையில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவும் ஆங்காங்கே மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பாலவிடுதியில் 50 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு-(மி.மீட்டரில்)- குளித்தலை-8, தோகைமலை-7.20, கிருஷ்ணராயபுரம்-17, மாயனூா்-9, பஞ்சப்பட்டி-1.40, கடவூா்-4, பாலவிடுதி-50, மைலம்பட்டி-15 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 111.60 மி.மீ. மழை பெய்துள்ளது. கோடை வெப்பத்தின் உச்சமான கத்தரி வெயிலின்போது மழை பெய்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.