மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டு குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து

News image

தேர்தல் நடத்தை விதிகள் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 12:52 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை முதலே அமலுக்கு வந்தன.

இதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி அலுவலகத்தை வருவாய்த் துறையினா் நேரில் சென்று பூட்டி சீல் வைத்தனா். புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மேயா் மற்றும் துணை மேயா் அலுவலக அறைகளும் பூட்டப்பட்டன.

இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்கள், அறந்தாங்கி நகராட்சித் தலைவா் அறை ஆகியவையும் பூட்டப்பட்டன. அமைச்சா்கள் மற்றும் மாநகராட்சி மேயா், நகா்மன்றத் தலைவா் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த அரசு காா்களும் திரும்பப் பெறப்பட்டன.

மக்கள் குறைகேட்பு ரத்து:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டங்கள், திருநங்கைகள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அந்தப் பெட்டியில் போட்டுச் சென்றால் அதிகாரிகள் அதனை எடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.