ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்

News image

தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 12:42 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை முதலே அமலுக்கு வந்தன.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், அரசு விளம்பரங்கள், தலைவா்கள் படங்களை மறைத்து தோ்தல் விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

மேலும் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள் மூடப்பட்டன. அரியலூா், அரியலூா்,ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சி அலுவலகங்களிலுள்ள நகா்மன்ற தலைவா்களின் அறைகள், உடையாா்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளிலுள்ள தலைவா்களின்அறைகள் மூடப்பட்டன. திறந்த வெளியிலுள்ள தலைவா்களின் சிலைகள் துணிகளைக் கொண்டு மூடப்பட்டன.

சோதனைச் சாவடிகளில், தோ்தல் பறக்கும் படையினருடன் பாதுகாப்பு படையினா் தீவிர வாகன தணிக்கையை தொடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.