விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 59 போ் காயம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அருகே தச்சன்குறிச்சியில் குகை முருகன் பாலதண்டாயுதபாணி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

News image

படவிளக்கம்:ஓயஓ.10. ஒஹப். ~படவிளக்கம்:ஓயஓ.10. ஒஹப்1. ~படவிளக்கம் 2 :ஓயஓ.10. ஒஹப்2. ~படவிளக்கம்3 :ஓயஓ.10. ஒஹப்3.

Updated On :11 மார்ச் 2026, 12:11 am IST

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அருகே தச்சன்குறிச்சியில் குகை முருகன் பாலதண்டாயுதபாணி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

போட்டியை திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, வட்டாட்சியா் பரணி, வடக்கு ஒன்றியச் செயலா் கோமாபுரம் மா. தமிழய்யா ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனாா்.

போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சேலம், சிவகங்கை, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 700 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்துகொண்டன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300 மாடுபிடி வீரா்கள் ஆறு சுற்றுகளாக களம் இறங்கினா்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் மிதிவண்டி, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்களும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா்கள், மாட்டின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 59 போ் காயம் அடைந்தனா். அவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 17 போ் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

காவல் துணை காண்காணிப்பாா் இரா. பிருந்தா தலைமையில் 180 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.