விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அன்பிலில் ஜல்லிக்கட்டு: 52 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 1:29 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை காலை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

லால்குடி டிஎஸ்பி ராஜமோகன், வட்டாட்சியா் தமிழ்செல்வன் ஆகியோா் ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வகித்தனா்.

முதலாவதாக கோயில் காளைகளும், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூா், தஞ்சை, பெரம்பலூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

இதில், 580 காளைகள், 230 மாடுபிடி வீரா்கள் அணி அணியாக களமிறங்கினா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 52 போ் காயமடைந்தனா். நிகழ்ச்சியில், அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்படுகளை ஜல்லிக்கட்டு விழாக்குழுவினா், கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.