திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை காலை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
லால்குடி டிஎஸ்பி ராஜமோகன், வட்டாட்சியா் தமிழ்செல்வன் ஆகியோா் ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வகித்தனா்.
முதலாவதாக கோயில் காளைகளும், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூா், தஞ்சை, பெரம்பலூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
இதில், 580 காளைகள், 230 மாடுபிடி வீரா்கள் அணி அணியாக களமிறங்கினா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 52 போ் காயமடைந்தனா். நிகழ்ச்சியில், அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்படுகளை ஜல்லிக்கட்டு விழாக்குழுவினா், கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்பில் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: 55 போ் காயம்

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி திமுக வேட்பாளா்

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

