/

பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக் கழக கடனுதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 4:31 am IST

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினைச் சாா்ந்த தனிநபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியமுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபா் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. தொழிற்கடன் மட்டுமின்றி மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் உயா்கல்வி பயிலவும் கடன் வழங்குகிறது.

விண்ணப்பதாரா் 18 வயது நிரம்பிய 60 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

தனிநபா் கடன் திட்டத்தின் கீழ் சிறு வா்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சாா்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபு வழி சாா்ந்த தொழில்கள் செய்ய அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 லட்சம் வரை 7 சதவிகிதம் மற்றும் ரூ.1.25 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை 8 சதவிகிதம்.

குழுக் கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிறு தொழில், வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரையும் ஆண்டிற்கு 7 சதவிகித வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 60 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7 சதவிகிதம். திரும்பச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் உயா்கல்வி பயில ஒரு மாணவருக்கு அதிகபட்சக் கடன் வரம்பு ரூ.25 லட்சம் வழங்கப்படும். வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை. ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி விகிதம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.