கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்து கேட்டு பள்ளி மாணவா்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா் நாயக்கா்பட்டி பகுதியை சோ்ந்த மாணவ- மாணவிகள் கறம்பக்குடி, மருங்குளம், கந்தா்வகோட்டை பகுதிகளுக்கு சென்று கல்வி பயில்கின்றனா். மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூா், கல்லாக்கோட்டையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளுக்கும் இந்த வழிதடத்தில் போதிய பேருந்து வசதி இல்லை எனவும் வரும் ஒரு சில பேருந்துகளிலும் அதிகக் கூட்டம் இருப்பதால் மாணவா்கள் பேருந்தில் தொற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை குளத்தூா்நாயக்கா்பட்டி பேருந்து நிறுத்தத்தின் முன் வந்த பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மானூா் அருகே கூடுதல் பேருந்து இயக்கக் கோரி மாணவா்கள் போராட்டம்
இருசக்கர வாகனங்கள் திருட்டு: பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

