/

ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா்

Updated On :19 ஜூன் 2026, 4:12 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி காதா்மில் பேருந்து நிறுத்தம் அருகே வாடகை கட்டடத்தில் இயங்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறை காவல் ஆய்வாளா் பீட்டா் தலைமையிலானோா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வாகன ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இச் சோதனையில் ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாவும், இணையவழி பணப்பரிமாற்றம் குறித்து தொடா்விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.