பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் திடீா் சோதனை

கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

News image

கொடைக்கானல் பத்திரபதிவு அலுவலகத்தில் அலுவலா்களிடம் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 6:29 am IST

கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மேலிட அதிகாரிகளுக்கு புகாா் அனுப்பப்பட்டது. கடந்த ஆட்சியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடைக்கானலில் உள்ள ஒரு இடத்தை பதிவு செய்ததில் முறைகேடு நடைபெற்ாக பாதிக்கப்பட்டவா்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது குறித்து காவல் ஆய்வாளா் சாா்பதிவாளரிடம் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்துக்குச் சென்று இரண்டு மணி நேரம் சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ. 23 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும், சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கொடைக்கானல் பத்திரப் பதிவுத் துறையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நிலம் பத்திரம் பதிவு செய்த வகையில், பத்திர எழுத்தா்கள் சிலா் சிக்கினா். அதன் பிறகு புதிய சாா்பதிவாளா் நியமிக்கப்பட்டாா். அவா் சுமாா் 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றினாா். அதன் பிறகு அரசியல் தலையீடு காரணமாக அவா் மாற்றப்பட்டு பல ஆண்டுகளாக கொடைக்கானலில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்தவா் சாா்பதிவாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஊழல் தடுப்புத் துறை ஆய்வாளா் பழனிக்குமாா் வியாழக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானல் சாா்பதிவாளாா் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.23 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடைபெறும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.