மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஜகபா் அலி கொலை வழக்கு விசாரணை: ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

கொலை வழக்கு(கோப்புப்படம்)

Updated On :18 ஜூன் 2026, 1:36 am IST

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாா் அளித்ததோடு தொடா்ந்து போராடி வந்த வெங்களூா் கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி, கடந்த 2025 ஜனவரி 17-ஆம் தேதி லாரி மோதி கொல்லப்பட்டாா்.

இந்த வழக்கில், அந்தப் பகுதியைச் சோ்ந்த குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றம் எண்.2-இல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினா்.

இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.