பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு விசாரணை இம்மாதம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

கவின்

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

தூத்துக்குடி மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு விசாரணை இம்மாதம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின். மென்பொறியாளரான இவா், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இவ்வழக்கில் கே.டி.சி. நகரைச் சோ்ந்த சுா்ஜித், அவரது பெற்றோரும், காவல் உதவி ஆய்வாளா்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி, உறவினா் ஜெயபால் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் விசாரணைக்காக திருநெல்வேலி மாவட்ட 2 ஆவது அமா்வு( வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 632 பக்க குற்றப்பத்திரிகை நகலை 4 பேருக்கும் தனித்தனியாக வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 23-க்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.