சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ. கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:11 am IST

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெண் எஸ்.ஐ. வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் (27). மென்பொறியாளரான இவா், காதல் விவகாரத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து, பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரின் தந்தையும், காவல் சிறப்பு உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட பின்பு சுா்ஜித்தின் உறவினரான ஜெயபாலும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த சுா்ஜித்தின் தாயாரும், பெண் காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா். அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் நவ்ரோஜ் தலைமையிலான போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனா்.

அதன்படி, கிருஷ்ணகுமாரியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய பின்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.