கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், கமேனியின் குடும்பத்தினரும், அந்நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராகப் போரில் களமிறங்கிய ஈரானின் புதிய தலைமை மதகுருவாக கொல்லப்பட்ட கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டார்.
கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போரால், கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 37 ஆண்டுகளாக ஈரானின் தலைமை மதகுருவாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனிக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அவரது உடல் மஷாத் நகரத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் ஈரானிய அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கமேனியின் இறுதிச் சடங்கு ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வரும் ஜூலை 4 ஆம் தேதியும், அந்நாட்டின் புனித நகரமாகக் கருதப்படும் கோமில் வரும் ஜூலை 7 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரும் நாள்களில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கமேனியின் இறுதிச் சடங்குப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
funeral for the slain Iranian supreme religious leader Ayatollah Ali Khamenei will be held on July 9.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜகபா் அலி கொலை வழக்கு விசாரணை: ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

