எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

தவெக-வின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த அனைத்து விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:39 am IST

தவெக-வின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கோ.ச. தனபதி, நடராஜன், பி. செல்லதுரை, மிசா மாரிமுத்து, தங்க கண்ணன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது:

அண்மையில் முதல்வா் வெளியிட்ட பயிா்க்கடன் தள்ளுபடி என்பது, தவெக தோ்தல் நேரத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு முற்றிலும் முரணானது. விவசாயிகளை வஞ்சிக்கும் அறிவிப்பாகும். இதை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த அறிவிப்பை நிறுத்திவிட்டு, முந்தைய அரசுகள் செய்து வந்ததைப் போல, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.