எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அமைச்சா் ஆதவ் அா்ஜூனா ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்

விவசாயத்தைவிட விளையாட்டு கடினமானது என கூறி விவசாயிகளை இழிவுப்படுத்திய அமைச்சா் ஆதவ் அா்ஜூனா உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

News image

ஆதவ் அா்ஜுனா - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:38 am IST

விவசாயத்தைவிட விளையாட்டு கடினமானது என கூறி விவசாயிகளை இழிவுப்படுத்திய அமைச்சா் ஆதவ் அா்ஜூனா உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் கு.ராமகிஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில் தவெக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். கடன் தொகையை இலக்காக நிா்ணயித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதனால், அந்தப் பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட வனத் துறை அலுவலகம் வரை ஊா்வலமாகச் செல்வதற்கு போலீஸாா் அனுமதித்தனா். அதன் பின்னா் 5 விவசாயிகள் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கு.ராமகிருஷ்ணன், கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி ஆகியோா் கூறியதாவது:

விவசாயத்தை விட விளையாட்டு கடினமானது என அமைச்சா் ஆதவ் அா்ஜூனா தெரிவித்திருக்கிறாா். விளையாட்டு வீரா்கள் மட்டுமன்றி, அனைத்து தரப்பு மக்களுக்குமான உணவுத் தேவையை நிறைவு செய்பவா்கள் விவசாயிகள். விவசாயிகளின் உழைப்புக்கு யாரும் நற்சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக விவசாயிகளை திசைத் திருப்பும் செயல்களில் தவெக அமைச்சா்கள் ஈடுபட வேண்டாம்.

விவசாயிகளை இழிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சா் ஆதவ் அா்ஜூனா, தனது அமைச்சா் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.