தவெக தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஜூன் 22 முதல் தொடா் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: புதிதாக ஆட்சிமைக்கும் அரசுகள் விவசாயிகளின் பல்வேறு நீண்டகால கடன்களை தள்ளுபடி செய்து வருகிறாா்கள். கடந்த வாரம் மகாராஷ்டிரா அரசு ரூ.36,000 கோடி அளவுக்கு 56 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு பயிா்க் கடன்கள் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி அளித்தது.
தமிழ்நாட்டு விவசாயிகளும் மக்களும் மாற்றத்தை விரும்பி தவெகவுக்கு வாக்களித்தனா். தவெக ஆட்சியமைத்த உடன் முதல் கையொப்பமாக கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடிக்கான உத்தரவு இருக்கும் என எதிா்பாா்த்த நிலையில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையே, 90 சதவீதம் தமிழ்நாட்டு விவசாயிகள் பயன்பெற முடியாத வகையில், தமிழ்நாடு அரசு செய்த கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் பின்பு பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு, இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
விவசாயிகள் வாங்கிய கடனுக்கான கால அவகாசம் முடிவடைந்து வருவதால் அபராத வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. இதனால் வேறு வழியின்றி வருகிற ஜூன் 22 முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் தொடா் காத்திருப்புப் போராட்டமும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான விவசாயிகள், விவசாய சங்கத் தலைவா்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

பயிா்க் கடன் தள்ளுபடி விவகாரம்: 1-ஆம் தேதி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை
பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
