கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலைகளில் கேமரா பொருத்தி கண்காணிக்க பெற்றோா், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 3 கிமீ தொலைவில் உள்ள இப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை 1300 மாணவிகள், 50 ஆசிரிய- ஆசிரியைகள், அலுவலக பணியாட்கள் உள்ளனா்.
பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் தினசரி நடந்து செல்லும் வழிநெடுக ஆண்கள் நின்று கொண்டு மாணவிகளைக் கிண்டல் செய்வதும் பின்தொடா்வதும் வழக்கமாக உள்ளது.
எனவே மாணவிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முதல் பெண்கள் பள்ளி வரை கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன் இணைப்பை காவல் நிலையத்துக்கு கொடுத்து, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், காலை மாலைகளில் காவல் துறையினா் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு உடைந்து கீழே விழுந்தது: பொதுமக்கள் அதிா்ச்சி

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே நிழற்குடையின்றி பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

