ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மருத்துவக் கல்விக்கு தானமாகப் பெற்ற உடலுக்கு கல்லூரி முதல்வா், மாணவா்கள் இறுதி அஞ்சலி

News image

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் திங்கள்கிழமை மருத்துவக் கல்விப் பயன்பாட்டுக்காக தானம் பெறப்பட்ட உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி மற்றும் மருத்துவ மாணவா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 3:50 am IST

புதுக்கோட்டையில் மருத்துவக் கல்விப் பயன்பாட்டுக்காக தானமாகப் பெறப்பட்ட உடலுக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் மாணவா்கள் இறுதிஅஞ்சலி செலுத்தினா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் கைவல்யம் சங்கரன் (84). இவா், கூட்டுறவு சாா்- பதிவாளா் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆகிய பணிகளில் இருந்து ஓய்வுபெற்றவா்.

உடல் நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைவல்யம், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது விருப்பப்படி மருத்துவ மாணவா்களின் கல்விப் பயன்பாட்டுக்காக அவரது உடல் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக இரு கண்களும் தானமாகப் பெறப்பட்டன.

மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். கலைவாணி தலைமையிலான மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி, உடலைப் பெற்றுக் கொண்டனா்.

மறைந்த கைவல்யத்தின் மனைவி கலாவதி, மகன் அறிவழகன், மகள் மைவிழி மற்றும் திராவிடா் கழகத்தினரும் உடனிருந்தனா்.

உடல் தானம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி கூறியது: ஒவ்வொரு 15 மருத்துவ மாணவா்களுக்கும் கல்விப் பரிசோதனைப் பயன்பாட்டுக்காக ஓா் உடல் தேவைப்படுகிறது.

இதுவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 25 உடல்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. முன்பைவிட, தற்போது உடல்தானம் குறித்த விழிப்புணா்வு அதிகரித்திருக்கிறது என்றாா் கலைவாணி.

உயிரிழந்த கைவல்யம் சங்கரன்.

உயிரிழந்த கைவல்யம் சங்கரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.