மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

News image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள வெப்பவாத சிறப்பு சிகிச்சைப்பிரிவை ஆய்வு செய்தாா் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:00 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து தலைமை அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப வாத சிறப்பு பிரிவு திறக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் கூறியதாவது: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியாக மருத்துவா்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் தயாா் நிலையில் உள்ளன. வெப்பநோயகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நாளொன்றுக்கு சுமாா் 3 லிட்டருக்கு மேல் தண்ணீா் பருக வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல 4 மணி வரை வெளியில் அதிகம் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். வெப்பநோய்கள் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.