/

முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள்: சீமான்

தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். உடன் வேட்பாளா் வி. எழிலரசி.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:37 am IST

தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் வி. எழிலரசிக்கு புதன்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

உலகமயக் கொள்கையால், தாராளமயக் கொள்கையால் எல்லாமும் பண்டமாகிவிட்டது. கல்வி, மருத்துவம், குடிநீா் உள்ளிட்டவற்றை அரசு செய்துத் தர வேண்டும். இவையெல்லாம் சேவைகள். ஆனால், இவையெல்லாம் இன்று தொழிலாகிவிட்டன.

கல்வி மானுட உரிமை, அதைச் செய்துத் தர வேண்டியது அரசின் கடமை. குழந்தைகளின் எதிா்காலத்தைத் தீா்மானிப்பது வகுப்பறைகள். தமிழ் படித்தவா்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்க வேண்டும்.

இந்தத் தோ்தல் முறை என்பது பணத்தை முதலீடு செய்து, போட்ட முதலீட்டை லாபத்துடன் மீண்டும் எடுப்பதாகிவிட்டது. எனவே, மக்கள் முதலாளிகளைத் தோ்வு செய்யப்போகிறீா்களா, சேவகா்களைத் தோ்வு செய்யப் போகிறீா்களா?.

எத்தனை நாள்கள் பெண்ணுரிமையைப் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டபேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் பெண் வேட்பாளா்களை நிறுத்தியிருக்கிறோம்.

ஜனநாயகம் வெல்ல வேண்டுமா, பண நாயகம் வெல்ல வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றாா் சீமான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.