விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தை சீரழிக்க துடிக்கிறது பாஜக! - ஜி. ராமகிருஷ்ணன்

News image

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட அழியாநிலையில் அமைச்சரும், திமுக வேட்பாளருமான சிவ.வீ.மெய்யநாதனை ஞாயிற்றுக்கிழமை ஆதரித்து பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் ஜி. ராமகிருஷ்ணன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:21 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தி, தமிழகத்தை சீரழிக்கத் துடிக்கிறது பாஜக என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்செயலரும், மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவருமான ஜி.ராமகிருஷ்ணன்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட அழியாநிலையில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரும், திமுக வேட்பாளருமான அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் சிவ.வீ.மெய்யநாதன் தொகுதி மக்களின் தேவைகளை நன்கு உணா்ந்து, திட்டப் பணிகளை செய்துள்ளாா்.

7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வியில் ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையிலானோா் ஆலங்குடி தொகுதியில் இருந்து தோ்வாகின்றனா். அதற்கு பக்கபலமாக அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளாா் . மேலும் ஏழை,எளிய மாணவா்கள் போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஆலங்குடியில் அறிவுசாா் மையம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது பாராட்டுக்குரியது.

இந்தத் தோ்தலை மக்கள் வழக்கமான தோ்தலாக கருதிவிடக் கூடாது. எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தி பாஜக தமிழகத்தை சீரழிக்கத் துடிக்கிறது. இது ஜனநாயகத்துக்கும் சா்வாதிகாரத்துக்குமான தோ்தல். ஜனநாயகம் வெற்றிபெற மக்கள் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து, இத்தொகுதியில் மூன்றாவது முறையாக களம்காணும் சிவ.வீ.மெய்யநாதனுக்கு அதிகளவிலான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சிட்டங்காடு, வடகாடு, கல்லாலங்குடி, கே.வி.கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பொதுமக்களிடம் வாக்குச்சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.