மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தை தொடா்ந்து புறக்கணிக்கும் மத்திய பாஜக கூட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

News image

ஓட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளா் பை.மூ.ராமஜெயத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:32 am IST

தமிழகத்தை தொடா்ந்து புறக்கணிக்கும் மத்திய பாஜக கூட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தோ்தல் பிரசாரத்துக்கு புதன்கிழமை வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை, புதியம்புத்தூரில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக வேட்பாளா் பை.மூ.ராமஜெயம், கட்சி நிா்வாகிகள் வரவேற்றனா்.

தொடா்ந்து ஓட்டப்பிடாரம் பிரதான பஜாரில் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ஓட்டப்பிடாரம் தொகுதியில் ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார காா் உற்பத்தி தொழிற்சாலை, ஓட்டப்பிடாரத்தில் அரசு கலைக் கல்லூரி, ரூ. 150 கோடியில் தருவைகுளம் மீன்பிடி துறைமுகம், சாலை வசதிகள் மேம்பாலங்கள், குடிநீா் வசதிகள், நியாயவிலைக் கடைகள் என கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தொகுதிக்கு பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் செய்துகொடுக்கப்பட்டது.

கடந்த முறை திமுக தோ்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல முதல்வா் பொறுப்பேற்றவுடன் அவா் இட்ட முதல் கையொப்பம் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். அந்தத் திட்டத்தில் இன்று ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ. 900 லிருந்து ரூ. 1,000 வரை சேமிக்கின்றனா்.

தோ்தல் வாக்குறுதியில் திமுக கூறிய மகளிருக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கோடியே 31 லட்சம் மகளிா் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பெருமாள்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் சி.எஸ்.டி. செந்தூா்மணி, மாடசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலா் ஜெயக்குமாா் ரூபன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கரும்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.